Aug 04, 2017 10:12 AM

’காலா’ பட வழக்கு - ரஜினிகாந்த் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்!

’காலா’ பட வழக்கு - ரஜினிகாந்த் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்!

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்திற்கு தடை கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

 

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், ராஜசேகரனை யார் என்றே எனக்கு தெரியாது. இந்த வழக்கு விளம்பரத்திற்காக தொடரப்பட்டுள்ளது, என்று விளக்கம் அளித்திருந்தார்.

 

நேற்று வந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரஜினிகாந்துடன் உள்ள தொடர்பை நிரூபிக்கும் விதமாக ராஜசேகரன், ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

 

இதையடுத்து இந்த வழக்கின் மறுவிசாரணை வரும் 8ஆம் தேதி தள்ளி வைத்தி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அன்றைய தினம் இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களுக்கள் நடைபெறும்.