Mar 22, 2019 09:05 AM

யோகி பாபுக்கு நடக்க இருந்த பாலாபிஷேகத்திற்கு தடை! - சோகத்தில் ரசிகர்கள்

யோகி பாபுக்கு நடக்க இருந்த பாலாபிஷேகத்திற்கு தடை! - சோகத்தில் ரசிகர்கள்

ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலிஸின் போது, அவர்களது கட் அவுட்டுக்கு, ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதற்கு, சில அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நடிகர்கள் தங்களது ரசிகர்களிடம் இனி பாலாபிஷேகம் வேண்டாம், என்று கோரிக்கை விடுத்ததால், சிலர் அதை கைவிட்டாலும், சில ரசிகர்கள் மட்டும் அதை இன்னும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

 

இப்படி, முன்னணி நடிகர்களுக்கு செய்யப்பட்ட இந்த பாலாபிஷேகம் தற்போது சில நடிகைகளுக்கும், ஏன், சில நேரங்களில் அறிமுக நடிகர்களின் கட் அவுட்களுக்கும் அது நடக்கிறது. 

 

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உள்ள யோகி பாபுக்கும் பாலாபிஷேகம் வைபவத்தை நடத்த ரசிகர்கள் முடிவு செய்தார்கள். யோகி பாபு நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘பட்டிபுலம்’ என்ற படம் ஓடும் சென்னை ரோகி திரையரங்கில் வைக்கப்பட்டிருக்கும் யோகி பாபு கட் அவுட்டுக்கு அவரது ரசிகர்கள் இன்று பாலாபிஷேகம் செய்வதாக இருந்தார்கள்.

 

இன்று மாலை 3.30 மணியளவில் பாலிபிஷேகம் செய்வதாக ரசிக்ர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த நிலையில், தற்போது யோகி பாபு கட் அவுடுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்த தடையை போட்டது வேறு யாருமில்லை, நடிகர் யோகி பாபு தான்.

 

பாலாபிஷேகம் என்ற பெயரில் உணவு பொருளை வீணாக்காதீர்கள், என்று ரசிகர்களிடம் யோகி பாபு வைத்த அன்பு வேண்டுகோளால், அவரது கட் அவுட்டுக்கு நடைபெற இருந்த பாலாபிஷேககத்தை ரசிகர்கள் சோகத்தோடு ரத்து செய்துவிட்டார்கள்.