May 27, 2019 02:57 PM

அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்!

அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் பெங்களூர் மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேட்சையாக போட்டியிட்டார். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க குறித்து கடுமையாக விமர்சித்து வந்த பிரகாஷ்ராஜ், தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார்.

 

இந்த நிலையில், தேர்தலில் தோல்வியடைந்த பிரகாஷ்ராஜ், விரைவில் தனி அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

 

தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டதால் தான் தோல்வியடைந்ததாக கூறிய பிரகாஷ்ராஜ், தனி அரசியல் கட்சி தொடங்கி அதன் மூலம் கர்நாடகத்தின் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து கூறிய பிரகாஷ்ராஜ், “பெங்களூரு முழுக்க கடந்த 6 மாத காலமாக மக்களை சந்தித்து பிரச்சனைகளை கேட்டு தெரிந்துகொண்டேன். அதற்கு தீர்வு காண குரல் கொடுத்தேன்.

 

தேர்தலில் மக்களின் முடிவை ஏற்கிறேன். எனது கொள்கைகள் நிறைவேற தொடர்ந்து உழைப்பேன். சுயேட்சையாக நின்றதால் மக்களுடன் இடைவெளி ஏற்பட்டது.

 

இதனால் தான் தனி கட்சி முடிவு எடுத்துள்ளேன். இன்னும் ஒரு வருடத்தில் பெங்களூரில் மாநகராட்சி தேர்தல் நடக்கவுள்ளது. அதில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்