Apr 06, 2020 02:11 PM

பிரபல இசையமைப்பாளர் மரணம்! - அதிர்ச்சியில் இந்திய திரையுலகம்

பிரபல இசையமைப்பாளர் மரணம்! - அதிர்ச்சியில் இந்திய திரையுலகம்

கொரோனா பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்திருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி பல பிரபலங்கள் உயிரிழந்து வருகிறார்கள். குறிப்பாக ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள் உயிரிழப்பு தொடர் கதையாகி வருகிறது.

 

இந்த நிலையில், மலையாள சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான எம்.கே.அர்ஜுனன் இன்று உயிரிழந்தார். கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், இசையமைப்பாளர் அர்ஜுனனின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், 83 வயதாகும் அர்ஜுனன் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நிலை குறைவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

50 வருடங்களாக கேரள சினிமாவில் இசையமைப்பாளராக பயணித்து வந்த அர்ஜுனன், சுமார் 200 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவரிடம் தான் ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முதலில் கீ போர்ட் கலைஞராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இசையமைப்பாளர் அர்ஜுனனின் மறைவுக்கு மலையாள சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்திய சினிமாவின் முன்னணி ஒலி வடிவமைப்பாளரான ரசூல் பூக்குட்டி அர்ஜூனனின் மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இதோ அவரது இரங்கல் பதிவு,