Jan 12, 2020 03:58 AM

நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம்!

நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தான் நடிக்கும் படங்களின் விழாக்களில் பங்கேற்கவில்லை என்றாலும், தனக்கு விருது வழங்கு கெளரவிக்கும் விழாக்களில் தவறாமல் கலந்துக் கொள்கிறார். அப்படி தான் சமீபத்தில் டிவி சேனல் ஒன்று வழங்கிய இரண்டு விருதுகளை நேரில் வந்துக் வாங்கிக் கொண்டார்.

 

இப்படி ஆண்டுக்கு பல படங்களில் நடித்து, பல விருதுகளை பெற்றுக் கொண்டிருக்கும் நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக ‘மூக்குத்தி அம்மன்’ படம் இருக்கப் போகிறதாம். இதை சொன்னவர், அப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரும், கதையாசிரியருமான ஆர்.ஜே.பாலாஜி தான்.

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு தற்போது 90 சதவீதம் முடிவடைந்து விட்டதாம். தொடர்ந்து 44 கன்னியாகுமரி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடத்திய ஆர்.ஜே.பாலாஜி, இன்னும் ஒரு வாரம் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப் போகிறார். இதன் பிறகு முழு படப்பிடிப்பும் நிறைவுப் பெறுகிறது.

 

அறிமுக இயக்குநர் என்.ஜே.சரவணன் உடன் இணைந்து இயக்கியிருக்கும் இப்படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி கூறுகையில், “Dr.ஐசரி K கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் நம் பக்கம் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருக்கும் போது நாம் படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பது தான். அதைப் படக்குழு தெளிவாக உணர்ந்து வேலை செய்திருக்கிறோம். படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்று தான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்வோம். மொத்த படக்குழுவும் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நவம்பர் 29, 2019 அன்று படப்பிடிப்பை துவக்கி 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம்.

 

Mukkuthi Amman

 

இயக்குநர்  NJ சரவணன் இல்லையென்றால் இத்தனை சீக்கிரம் படப்பிடிப்பை முடித்திருக்க முடியாது. அவரது உழைப்பு அபாரமானது. நயன்தாரா இப்படத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்த கதாப்பாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கினைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும்.  மேலும் அவரது கதாப்பாத்திரம் படத்திற்கு பெரும் பலமாகவும் இருக்கும்.” என்றார்.

 

நயன்தாரா முதல் முறையாக அம்மன் வேடத்தில் நடிப்பதால் இப்படத்திற்காக விரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.