Dec 31, 2020 05:35 AM

சித்ரா தற்கொலை வழக்கில் புது திருப்பம்! - முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல முயற்சி

சித்ரா தற்கொலை வழக்கில் புது திருப்பம்! -  முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல முயற்சி

சீரியல் நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தற்கொலை செய்துக் கொண்டார். சீரியல் படப்பிடிப்பு முடித்துவிட்டு இரவு ஓய்வு விடுதிக்கு சென்றவர், அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறை சித்ரா, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தது.

 

இதற்கிடையே, சித்ரா தற்கொலை வழக்கை விசாரணை செய்த ஸ்ரீபெரும்பத்தூர் ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கையை நேற்று சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் சித்ராவின் குடும்பத்தார் மற்றும் அவரது கணவரின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவின் நண்பர்கள் மற்றும் ஹேம்நாத்தின் நண்பர்கள் என மொத்தம் 16 பேரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், சித்ராவின் விசாரணை சரியான முறையில் நடைபெறவில்லை என்று கூறும் அவரது தாய் விஜயா, சித்ரா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும், என்று முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். இதன் மூலம் சித்ராவின் தற்கொலை வழக்கை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் சித்ராவின் தாய் ஈடுபட்டுள்ளார்.

 

ஏற்கனவே சித்ராவை அரசியல்வாதி ஒருவர் மிரட்டி வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், சித்ராவின் தாய் முதல்வரின் தனிப்பிரிவில் சித்ராவின் தற்கொலை குறித்து மனு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.