Latest News :

ஜெயா டிவியின் தமிழ் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம்

7299e67b5b671925656616f3c7c3603b.jpg

ஜெயா டிவியில் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று பிரபல பேச்சாளர் பி.மணிகண்டன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

 

வாழ்வை வளமாக்குவது ஆன்மீகமா, அறிவியலா என்ற தலைப்பில் நடக்கும் இப்பட்டிமன்றத்தில் ஆன்மீகமே என்ற அணியில் நல்லாசிரியர் ரவிக்குமார், கார்த்திகா ராஜா, தாமல் சரவணன் ஆகியோரும், அறிவியலே என்ற அணியில் ஆர்ஜே.நர்மதா, காவ்யா, உமாசங்கர் ஆகியோரும் பங்கேற்று தங்கள் அணியின் வாதங்களை ஆணித்தரமாகவும், அர்த்தமுள்ளதாகவும் முன்வைத்துள்ளனர். 

 

பெரும்பாலான பட்டிமன்றங்கள் வெறும் கேளிக்கைக்காக நடத்தப்படும் இன்றைய சூழலில் இந்நிகழ்ச்சியானது நேயர்களின் சிந்தனைக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்று நிகழ்ச்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியை தமிழ் புத்தாண்டன்று காலை 9:00 மணிக்கு ஜெயா டிவியில் காணலாம்.

 

காமெடி கடியரங்கம்

 

Comedy Arangam

 

ஜெயா டிவியில் தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘காமெடி கடியரங்கம்’. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகரும், டிவி தொகுப்பாளருமான ஆதவன் நடுவராக இருந்து தொகுத்து வழங்குகிறார். வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் 90ஸ் கிட்ஸா, 2K கிட்ஸா என்ற தலைப்பில் நடைபெறும் இந்த புதுமையான நகைச்சுவை நிகழ்ச்சியில் சவுண்ட் சந்தியா, நர்மதா, ரிஷா, பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று கலக்கலாகவும், கலகலப்பாகவும் பேசி வயிறுகுலுங்க சிரிக்க வைக்கவுள்ளனர்.

 

பூவா தலையா

 

Poova Thalaiya

 

ஜெயா தொலைக்காட்சியில் ஏப்ரல் 14 காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி "பூவா தலையா".நகைச்சுவை கலந்த  ஒரு போட்டிக்கு போட்டி நிகழ்ச்சி… சின்னதிரை நகைச்சுவை நிகழ்ச்சிகளில்  நன்கு அறியப்பட்ட நட்சத்திரங்கள்  மற்றும் சின்னதிரை தொகுப்பாளினிகள்  கலந்து கொண்டு தங்கள்  திறமைகளை  வெளிப்படுத்தும் ஒரு மாறுபட்ட  நிகழ்ச்சி. போட்டியாளர்கள்  இரு குழுக்களாக  பிரிந்து தங்கள் திறமையை வெளிபடுத்தினர். இந்நிகழ்ச்சியின் தொகுத்துக் வழங்குபவர்  தர்ஷினி அவர்கள்.

 

இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி யோடு இணைந்து ஐரா நிறுவனத்தின் சார்பில் D.ராஜரத்தினம் தயாரித்து இயக்கிவருகிறார். மகிழ்ச்சியும், கலகலப்பும், நகைச்சுவையும் ஒன்றாய் இணைந்த இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஏப்ரல் 14 காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி ‘பூவா தலையா’ உள்ளது.

 

கீழடி தமிழர்களின் வேரடி..

 

Keezhadi

ஜெயா தொலைக்காட்சியில் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக கீழடி தமிழர்களின் வேரடி..என்ற நிகழ்ச்சியினை கவிஞர் சினேகன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டு (14.4.23) காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

வைகை நதி கரையில் சங்க கால நகர நாகரிகத்திற்கு சாட்சியாக இருக்கும் கீழடி அருங்காட்சியத்திற்கு கவிஞர் சினேகன் நேரில் சென்று தமிழர்களின் தொன்மை,கலாச்சாரம்,பண்பாடு,பயன்பாடு, தொழில் விளையாட்டு, வீரம்...இப்படி சுமார் 2600 வருடங்களுக்கு முன்னதாக எப்படி வாழ்வாங்கு வாழ்ந்தார்கள் என்பதனை பிரத்யோகமாக படடுப்பதிவு செய்யப்பட்டு வழங்கவிருக்கிறார்.

 

இதில் கவிஞர் சினேகன் அவர்கள் தனக்கே உரிய கவித்துவமான வரிகளோடு பெருமைமிகு தமிழர்களின் வரலாற்றை உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்காக வழங்குகிறார் .