ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், ரஜினிகாந்த் தனது புதிய படத்தில் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்துள்ளார்.
மூத்த இயக்குநர்களுடன் மட்டும் பணியாற்றி வந்த ரஜினிகாந்த், காலத்திற்கு ஏற்ப வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது இளம் இயக்குநர்களின் படங்களில் நடிகக் தொடங்கியுள்ளார். பா.ரஞ்சித்துடன் ‘கபாலி’ மற்றும் ‘காலா’ என்று தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்தவர், தற்போது ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ போன்ற வித்தியாசமான வெற்றிப் படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்துள்ளார்.
ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் கதைக்களம் அரசியல் பின்னணியைக் கொண்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து படம் குறித்து விவாதித்த கார்த்திக் சுப்புராஜுக்கு, ரஜினிகாந்த் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முழுக்கதையையும் கேட்டிருக்கும் ரஜினிகாந்த், படப்பிடிப்பு எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம், என்றும் கூறியிருக்கிறாராம்.
இந்த நிலையில், ரஜினிகாந்துக்கு ஜோடி தேடும் பணியில் கார்த்திக் சுப்புராஜ் ஈடுபட்டுள்ளாராம். கதைக்கு ஏற்றபடி எந்த நடிகையானாலும் ஓகே தான், என்று ரஜினிகாந்த் கூறியிருப்பதால் தீபிகா படுகோனை ரஜினிக்கு ஜோடியாக்க கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம், அஞ்சலி மற்றும் திரிஷா ஆகியோரும் ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...