Jan 14, 2020 03:23 AM

கள்ளக்காதல் பிரச்சினையால் கைவிடப்பட்ட மகாலக்‌ஷ்மி! - கைகொடுத்த பிரபல நடிகை

கள்ளக்காதல் பிரச்சினையால் கைவிடப்பட்ட மகாலக்‌ஷ்மி! - கைகொடுத்த பிரபல நடிகை

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தேவதையை கண்டேன்’ தொடரில் நடித்து வரும் மகாலக்‌ஷ்மி மற்றும் ஈஸ்வர் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக, நடிகர் ஈஸ்வரின் மனைவி நடிகை ஜெயஸ்ரீ புகார் அளித்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பிரச்சினையால், ’தேவதையை கண்டேன்’ தொடரின் டி.ஆர்.பி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து டி.ஆர்.பி-யை உயர்த்த சேனல் நிர்வாகம் எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்ததாம்.

 

இதற்கிடையே, ‘தேவதையை கண்டேன்’ தொடரை விரைவில் முடிக்க முடிவு செய்த சேர்னல் நிர்வாகும் வேறு ஒரு தொடரை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனால், மகாலக்‌ஷ்மியின் வாய்ப்பு பறிபோன நிலையில், அவருக்கு நடிகை ராதிகா கை கொடுத்திருக்கிறார். ஆம், ராதிகா தயாரித்து நடிக்க இருக்கும் ‘சித்தி 2’ தொடரில் மகாலக்‌ஷ்மிக்கு முக்கியமான கதாப்பாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாம்.

 

Actress Radhika

 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘சித்தி 2’ தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், மக்களிடம் பெரும் வரவேற்பு பெறும் என்று கூறப்படுகிறது.

 

மகாலக்‌ஷ்மி ராதிகா மூலமாக தான் தொலைக்காட்சி தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.