Jun 20, 2022 11:39 AM

’நாதிரு தின்னா’ மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நடன இயக்குநர் சுவர்ணா

’நாதிரு தின்னா’ மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நடன இயக்குநர் சுவர்ணா

லட்சுமி , பானுமதி, ரேவதி, சுகாஷினி, லட்சுமி ராமகிருஷ்னா ஆகிய பெண் இயக்குநர்கள் வரிசையில் நடன இயக்குநர் சுவர்ணாவும் இணைகிறார். 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கும் சுவர்ணா, ‘நாதிரு தின்னா’ படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார்.

 

பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணத்திலும் , காதலித்து இணையும் திருமணத்திலும் நடைபெறும் குடும்ப சிக்கல்களை வைத்து இளமை ததும்ப நகைச்சுவையுடன் கூடிய ஒரு வித்தியாசமான படமாக உருவாகியுள்ள இப்படத்திற்காக நான்கு மாநிலங்களில் நட்சத்திர தேர்வு நடத்தினார். இதில் தமிழகம், ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார்.

 

சபயாச்சி மிஸ்ரா, ஷ்யாம், மகி, ராகுல் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ராதிகா ப்ரீத்தி, விஜயலட்சுமி, ஹரிகா, ரக்ஷா, அப்பாஜி, தருண் மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

ஸ்ரீதர் நர்லா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு முரளீதர் ராகி சையமைக்க, வின்செண்ட் ஜெயராஜ், விஜயகுமார் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடனம் அமைத்து இயக்கியிருக்கும் சுவர்ணா எஸ்.எஸ் ட்ரீம் கலர்ஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.