ரகசிய திருமணம் செய்துக் கொண்ட நடிகை! - வேறு பெயரில் மீண்டும் நடிக்க வருகிறார்
சினிமா நடிகைகள் பலர் லேட்டாக திருமணம் செய்துக் கொள்கிறார்கள். காரணம், திருமணமாகிவிட்டால். அவர்களுக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பதால், திருமண வயதை கடந்து பல வருடங்கள் ஆன பிறகே திருமணம் குறித்து யோசிக்கிறார்கள். சில நடிகைகளோ காதலில் விழுவதோடு, ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டு அது பற்றி வெளியே சொல்லாமல் நடிப்பை தொடர்கிறார்கள்.
இப்படி ரகசிய திருமணம் செய்துக் கொண்ட சில நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவதால் அவர்களது ரகசிய திருமணம் பற்றி தகவல் வெளியாவதோடு, அதனால் அவர்கள் தங்களது சினிமா வாழ்க்கையையும் இழக்க நேரிடுகிறது. அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருப்பவர் தான் அதிதி மேனன்.
கேரளாவை சேர்ந்த அதிதி மேனனின் இயற்பெயர் சாய்ன சந்தோஷ். இந்த பெயரில் தான் இவர் மலையாள தொலைக்காட்சிகளில் விஜே-வாகவும், நடிகையாகவும் வலம் வந்தார். பிறகு அதிரா மேனான் என்ற பெயரில், ‘நெடுநல்வாடை’ என்ற தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானார். ஆனால், இயக்குநருடன் ஏற்பட்ட மோதலால் அப்படத்தில் இருந்து விலக, வேறு ஒரு ஹீரோயினை வைத்து அப்படம் முடிக்கப்பட்டு ரிலீஸாகிவிட்டது.
பிறகு அதிதி மேனன் என்ற பெயரில் ‘பட்டதாரி’ என்ற படத்தில் நடித்து சற்று பிரபலமானவர், தினேஷுடன் ‘களவாணி மாப்பிள்ளை’ என்ற படத்தில் நடித்தார். பிறகு அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் ‘சந்தனத்தேவன்’ படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானர்.
இதற்கிடையே, ‘பட்டதாரி’ படத்தில் ஹீரோவாக நடித்த அபி சரவணன், அதிதி மேனன் தன்னை திருமணம் செய்துக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார். ஆனால், அந்த புகாரை மறுத்த அதிதி மேனன், அபி சரவணனை காதலித்தது உண்மை தான், ஆனால் அவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அவர் சமூக சேவை செய்வதாக பலரிடம் பணம் வாங்கி கொண்டு மோசடி செய்து வருகிறார், என்று அவர் மீது குற்றம் சாட்டினார்.
இப்படி பல நாட்களாக கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ரகசிய திருமண விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், அதிதி மேனன் தனது பெயரை மிர்னா மேனன் என்று மாற்றிக் கொண்டு மீண்டும் கோலிவுட்டில் நடிக்க தொடங்கியிருக்கிறாராம்.
இந்த முறையாவது அவரது புது பெயர் அவரை முன்னணி ஹீரோயினாக்குகிறதா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.