May 23, 2020 10:16 AM

நடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை!

நடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை!

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவருக்கு வயது 36.

 

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இன்றி என்று பல மொழிகளில் நடித்திருக்கும் வாணிஸ்ரீ, பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவரது மகன் அபிநயா வெங்கடேஷ். 36 வயதாகும் இவர் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

 

இந்த நிலையில், சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த அபிநயா வெங்கடேஷ்,  அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

 

அதே சமயம், அபிநயா வெங்கடேஷ் நெஞ்சுவலி காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்ததாகவும் சிலர் கூறுவதால், அவரது மரணத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.