Jul 17, 2018 02:06 PM

கல்யாணம் குறித்து மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கல்யாணம் குறித்து மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தான் பெர்யர் சொல்லும் அளவுக்கு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இருந்தாலும், தனி ஹீரோயினாக அவர் முன்னணி ஹீரோக்களுடன் இன்னும் ஜோடி சேரவில்லை.

 

இந்த நிலையில், தனது திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சினிமாவுக்கு வந்ததுக்குப் பிறகு கல்யாணத்தைப் பற்றி யோசிக்கிறதே இல்லை. எப்போ அமையுதோ அப்போ தாராளமாக கல்யாணம் பண்ணிக்குவே, என்று கூறியிருக்கிறார்.

 

மேலும், தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கு மரியாதையும் கிடைப்பதில்லை, சரியான வாய்ப்பும் கிடைப்பதில்லை, என்ற தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.