பாலியல் புகார் கூறிய அமலா பாலை மிரட்டிய இயக்குநர் சுசி கணேசன்!

பெண் இயக்குநர் லீனா மணிமேகலை, இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறி வந்த நிலையில், அதை சுசி கணேசன் மறுத்ததோடு, தனது மீது பொய்யான புகார் கூறும் லீனா மணிமேகலை மீது வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நடிகை அமலா பால், இயக்குநர் சுசி கணேசன், தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறி, அது பற்றி ட்விட்டரில் பெரிய பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.
அமலா பாலின் இந்த புகார் மூலம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், சுசி கணேசன், போன் செய்து ஆபாசமாக பேசி தன்னை மிரட்டியதாகவும், அதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருப்பதாகவும் அமலா பால் மீண்டும் சுசி கணேசன் மீது புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமலா பால், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இயக்குநர் சுசி கணேசன் மற்றும் அவரின் மனைவி மஞ்சரி எனக்கு போன் செய்தார்கள். என் நிலையை விளக்கலாம் என்று நினைத்து போனை எடுத்தேன். அவரின் மனைவியை சமாதானம் செய்ய முயன்றபோது சுசி என்னை திட்டத் துவங்கினார். அவரின் மனைவியோ அதை கேட்டு சிரிக்கிறார். இருவரும் சேர்ந்து என்னை பற்றி கேவலமாக பேசினார்கள். இது போன்று செய்து என்னை பயமுறுத்தலாம் என்று நினைக்கிறார்.” என்று தெரிவித்திருக்கிறார்.