அர்ச்சனாவின் அராஜகத்தால் கண் கலங்கிய பாலாஜி! - பிக் பாஸின் புதிய அதிர்ச்சி

பிக் பாஸின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை ரேகா முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியாக உள்ளார். அவர் யார்? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கும் நிலையில், நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர் ஆவதற்காக சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் அதிரடி காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அர்ச்சனா ஆகியோர் மற்றவர்களிடம் இருந்து எதாவது குறை கண்டுபிடித்து அதை வைத்து தங்களை பிரதான போட்டியாளராக வெளிக்காட்டி வருகிறார்கள். அந்த வகையில், அர்ச்சனா பாலாஜியை டார்க்கெட் செய்து நடத்திய டிராமாவால், தைரியமான மற்றும் வெளிப்படையாக பேசும் போட்டியாளரான பாலாஜியே கண் கலங்கி அழுதுவிடுகிறார்.
இன்று வெளியான புரோமோவில் அர்ச்சனாவின் அதிரடி ஆட்டத்தை தாங்க முடியாமல் பாலாஜி தனியாக உட்கார்ந்து கண் கலங்குகிறார். சுரேஷ் சக்கரவர்த்தியால் அவ்வபோது அனிதா சம்பத் கண் கலங்கி வந்த நிலையில், தற்போது அர்ச்சனாவும் தனது பங்குக்கு சக போட்டியாளர்களை அழ வைக்க தொடங்கிவிட்டார்.
இதோ அந்த வீடியோ,