Nov 20, 2020 06:30 AM

அதுல்யா நடித்த படுக்கையறை காட்சி! - வைரலாகும் ‘என் பெயர் ஆனந்தன்’

அதுல்யா நடித்த படுக்கையறை காட்சி! - வைரலாகும் ‘என் பெயர் ஆனந்தன்’

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவரான அதுல்யா ரவி, ‘அடுத்த சாட்டை’, ‘நாடோடிகள் 2’ ஆகியப் படங்களை தொடர்ந்து ‘என் பெயர் ஆனந்தன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதுவரை யாரும் தொடாத சமூக பிரச்சினையை மையமாக கொண்டு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோவாக சந்தோஷ் பிரதாப் நடித்திருக்கிறார். மேலும் தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

 

கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசனின் சவீதா சினி ஆர்ட்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணப்பாவின் காவ்யா புரொடக்சன்ஸ்  நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்'.  இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்ற ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ படத்தை இயக்கியவர். இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’.

 

இந்தப்படத்தின் கதை ஆரம்பத்தில் த்ரில்லராக பயணித்தாலும், போகப்போக உணர்வுப்பூர்வமான பயணத்துக்குள் ரசிகர்களை அழைத்து சென்றுவிடும். காரணம் த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொணடு இந்தப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக இதுவரை யாருமே பேசியிராத ஒரு சமூக பிரச்சனையை கையிலெடுத்து துணிச்சலாக இந்தப்படம் பேசியுள்ளது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம், இப்படியெல்லாம் கூட மக்கள் இருக்கிறார்களா, இவர்களுக்கு இப்படியெல்லாம் கூட பிரச்சனைகள் இருக்கிறதா, என இந்தப்படம் நிச்சயம் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும். .

 

செம்பல் சர்வதேச திரைப்பட விழா, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச திரைப்பட விழா மற்றும் தென் கொரியாவில் நடைபெற்ற SEE சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு மூன்றுமுறை சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை இந்தப்படம் பெற்றுள்ளது. மேலும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி விருதையும் பெற்றது.

 

“திரைப்பட விழாக்களில் இந்தப்படத்தை பார்த்த பலரும் இதுவரை பார்த்திராத, ஒரு வித்தியாசமான அதேசமயம் ஜனரஞ்சகமாக ரசிக்க கூடிய விஷயங்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்கள். குறிப்பாக படத்தின் டேக்லைனில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, இது தனித்துவமான தமிழ்ப்படமாகவே உருவாகி இருக்கிறது என பாராட்டினார்கள்” என்கிறார் ஸ்ரீதர் வெங்கடேசன்.  

 

மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு புதுமுயற்சியாக க்ளைமாக்ஸுக்கு சற்று முன்பாக 11 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இடம்பெறுகிறது. இது வழக்கமான ஒரு பாடலாக இல்லாமல் உணர்வுப்பூர்வமான பாடலாக இருக்கும்.

 

இந்தப்படத்தின் நாயகன் சந்தோஷ் பிரதாப்பின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் மறக்க முடியாது ஒன்று.. ஒரு நாற்காலியிலேயே அமர்ந்தபடி, தனது நடிப்பை முகத்தின் உணர்ச்சிகளிலேயே விதம் விதமாக பிரதிபலித்து நடித்துள்ளார். நிச்சயம் இந்தப்படம் தமிழ்சினிமாவில் அவருக்கு அடுத்த படியாக இருக்கும், என்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன்.

 

இப்படத்தின் கூடுதல் சிறப்பு அம்சமாக இதுவரை ஹோம்லியாக நடித்த அதுல்யா, இப்படத்தில் சில படுக்கையறை காட்சிகளில் நடித்திருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் புகைப்படங்களில் அதுல்யாவும், சந்தோஷும் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

En Peyar Anandan

 

இந்த நிலையில், படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை நேரடியாக ஒடிடி-யில் ரிலீஸ் செய்ய பல ஒடிடி நிறுவனங்கள் படக்குழுவினரை அனுகினாலும், முதலில் திரையரங்கங்களில் தான் படத்தை ரிலீஸ் செய்வோம், என்று படக்குழுவினர் உறுதியாக உள்ளனர். காரணம், படம் தொடங்கும் போதே, இரண்டு விஷயங்களில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். ஒன்று சர்வதேச திரைப்பட விழாக்களில் படத்தை திரையிடுவது மற்றும் திரையரங்கங்களில் ரிலீஸ் செய்த பிறகே ஒடிடி-யில் ரிலீஸ் செய்வது.