Aug 18, 2020 02:35 PM

’செம்பருத்தி’ சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்ட பரதா நாயுடு! - இது தான் காரணமாம்

’செம்பருத்தி’ சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்ட பரதா நாயுடு! - இது தான் காரணமாம்

தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை தொடராக ‘செம்பருத்தி’ தொடர் உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் தான் டி.ஆர்.பி ரேட்டிங்கில் நம்பர் ஒன். இதனை முறியடிக்க மற்றொரு முன்னணி சேனல் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் செம்பருத்தி தொடர் முறியடித்து வருகிறது.

 

இதற்கிடையே, ‘செம்பருத்தி’ தொடரில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த பரதா நாயுடு, திடீரென்று அத்தொடரில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், அதற்கான காரணத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி தெரிவிக்காத நிலையில், பரதா நாயுடு தற்போது தெரிவித்துள்ளார்.

 

பரதா நாயுடுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது அனைவரும் அறிந்தது தான். அவர் தனது திருமணத்திற்காக சில நாட்கள் விடுமுறை கேட்டாராம். அதற்காக அவரை சீரியலில் இருந்தே தூக்கி விட்டார்களாம்.

 

Bharatha Naidu