Nov 19, 2020 04:47 PM

‘அரண்மனை 3’ படத்தில் இடம்பெறும் பிரம்மாண்ட சண்டைக்காட்சி!

‘அரண்மனை 3’ படத்தில் இடம்பெறும் பிரம்மாண்ட சண்டைக்காட்சி!

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை’ சீரிஸ் திரைப்படங்களின் முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக ‘அரண்மனை 3’ உருவாகி வருகிறது.

 

ஆர்யா, ராஷி கன்னா, சுந்தர்.சி, ஆண்டிரியா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சண்ட் அசோகன், மதுசூதன் ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலபள்ளி லீலா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இளம் இறங்கியுள்ளார்கள்.

 

இப்படத்திற்காக சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் ரூ.2 கோடி செலவில் கலை இயக்குநர் குருராஜ் கைவண்ணத்தில் பிரம்மாட்ன அரண்மனை செட் ஒன்று அமைக்கப்பட்டு, அதில் பிரம்மாண்டமான முறையில் சண்டைக்காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் உச்சக்கட்ட சண்டைக் காட்சியான இச்சண்டைக்காட்சி 11 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.

 

இந்த சண்டைக்காட்சியை பீட்டர் ஹெய்ன் வடிவமைத்துள்ளார். இதன் மூலம் இயக்குநர் சுந்தர்.சி முதல் முறையாக ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்னுடன் கைகோர்த்துள்ளார்.

 

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுந்தர்.சி முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை நிறைந்த ‘ஆக்‌ஷன்’ படத்தை இயக்கினார். அப்படத்தை தொடர்ந்து ‘அரண்மனை 3’ யில் தான் மிக பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை வைத்துள்ளார்.

 

பொதுவாக பேய் படங்களில் காமெடியும், கிராபிக்ஸும் தான் நிறைந்திருக்கும். ஆனால், சுந்தர்.சி தனது ‘அரண்மனை 3’ படத்தில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை வைத்திருப்பதோடு, அவற்றுக்கு கோடி கணக்கில் செலவு செய்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

குஜராத் ராஜ்கோட், சென்னை மற்றும் பொள்ளாச்சி போன்ற இடங்களில் தொடர்ந்து படப்பிட்ப்பு நடத்தி வரும் ‘அரண்மனை 3’ குழுவினர் படத்தை 2021 சம்மர் ஸ்பெஷலாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.