Jun 25, 2018 06:38 PM

பெண்கள் அறையில் நுழைந்த மஹத் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு

பெண்கள் அறையில் நுழைந்த மஹத் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனைப் போல இரண்டாம் சீசன் தற்போது தான் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. மேலும், போட்டியாளர்கள் செய்யும் சில்மிஷங்களை மிட் நைட் மசாலா, மார்னிங் மசாலா என்ற பெயர்களில் இணையத்தளத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

 

இந்த நிலையில், இன்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மஹத் வீட்டில் விளக்கு அணைக்கப்பட்ட பிறகு பெண்கள் ரூமுக்கு சென்று இரண்டு பெண்களுக்கு நடுவில் படுத்துக்கொண்டார்.

 

அதை பார்த்த பாலாஜி உள்ளிட்ட சிலர் அங்கு வந்து அவரிடம் எழுந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர் அப்போதும் கேட்காமல் அங்கேயே நீண்ட நேரம் இருந்தார்.

 

அதேபோல், ஷாரிக், மஹத், ஜனனி ஆகியோர் காலை காபி குடித்துக் கொண்டிருந்த போது, ஜனனியின் உடை லேசாக விளகிய போது, ஷாரிக் அந்த இடத்தில் காப்பி கப்பை வைத்தார். அவரது இந்த செயல் அனைவரையும் முகம் சுழிக்க செய்ததோடு.

 

மேலும், ”அக்கா...அக்கா...என்று அழைத்துவிட்டு இப்படி செய்கிறாரே...” என்று ஜனனியும் தனது வருத்தத்தை மஹத்திடம் தெரிவித்தார்.