Mar 22, 2020 05:41 AM

கோரோனா வைரஸ் தாக்கம் - ‘நந்தினி’ நடிகையின் அதிரடி நடவடிக்கை

கோரோனா வைரஸ் தாக்கம் - ‘நந்தினி’ நடிகையின் அதிரடி நடவடிக்கை

கோரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இன்று நாடு முழுவதும் சுய ஊர் அடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியில் அறிவுரையை ஏற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊர் அடங்கு உத்தரவில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கான விழிப்புணர்வு பணியில் சினிமா நடிகர், நடிகைகள் பலரும் ஈடுபட்டனர். அவர்களாகவே வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.

 

இதற்கிடையே, கோரோ வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான அரசு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்பதை மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில், ‘நந்தினி’ சீரியல் நடிகை நித்யா ராம், அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.

 

அதாவது, அவர் தனது கணவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அப்படி அவரு முத்தம் கொடுக்கும் போது, அவரும் அவரது கணவரும் மாஸ் அணிந்துக் கொண்டனர். இதன் மூலம், ரொமான்ஸ் செய்தாலும், பாதுகாப்புடன் ரொமான்ஸ் செய்யுங்கள், என்பதை நித்யா ராம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

 

மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கும் நித்யா ராம், ‘நந்தினி’ சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானார். முதல் கணவரை விவாகரத்து செய்தவர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.