பிரபல தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை! - அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க நடிகர் சங்கம் சார்பில், மன அழுத்தத்தில் இருக்கும் நடிகர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் குழு ஒன்றும் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், பிரபல நடிகை ரியாமிகா சென்னையில் வரது வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
’எக்ஸ் வீடியோஸ்’, ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் ரியாமிகா, சென்னை வளசரவாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். பெங்களூரை சேர்ந்த இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் தங்கி சினிமாவில் நடித்து வந்த நிலையில், இன்று அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்போது ரியாமிகாவுக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.