Jul 25, 2018 06:23 PM

மோசடி வழக்கில் பிரபல டிவி தொகுப்பாளினி கைது!

மோசடி வழக்கில் பிரபல டிவி தொகுப்பாளினி கைது!

சின்னத்திரை தொடர்களில் நடிப்பவர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர்களும் பல்வேறு சர்ச்சையான விஷயங்களில் சிக்கி வரும் நிலையில், பிரபல டிவி தொகுப்பாளினி ஒருவர் மோசடி வழக்கில் கைதாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜெயா டிவியில் முக்கிய தொகுப்பாளராக இருப்பவர் அனிஷா. இவர் தனது கணவருடன் சேர்ந்து ஸ்கை எக்யூப்மெண்ட் என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வந்திருக்கிறார். இதற்கிடையே பிரசாந்த் என்பவரிடம் இருந்து 101 வீட்டு ஏ.சி களை வாங்கிய அனிஷா அதற்கான பில் தொகைக்கு செக் ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால், அவர் கொடுத்த செக் வங்கியில் பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகிவிட்டது. 

 

இதையடுத்து, அனிஷாவை தொடர்பு கொண்டு பிரசாந்த் பணம் கேட்க, சரியான முறையில் பதில் சொல்லாத அனிஷா, அவரை மிரட்டும் தோனியிலும் பேசியதாக கூறப்படுகிறது.

 

இதன் பிறகு கே.கே. நகர் காவல் நிலையத்தில் பிரசாந்த் புகார் தெரிவிக்க, அதன் பேரில் தொகுப்பாளினி அனிஷாவையும், அவரது கணவரின் தம்பியையும் போலீசார் மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர். 

 

அனிஷாவின் கணவர் தலைமறைவாகியுள்ளதால் அவரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.