நான் முதல்வர் ஆனால்..! - ‘சர்கார்’ விழாவில் விஜயின் அதிரடி பேச்சு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளியன்று வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கலாநிதி மாறன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்ட விழாவில், படத்தின் பாடல்களை ரசிகர்கள் மூலமாக வித்தியாசமான முறையில் வெளியிட்டனர். மேலும், படத்தில் இடம்பெறும் பாடல்களை மேடையில் லைவாக இசைக் கலைஞர்கள் பாடியதோடு, பாடலுக்கு நடனமும் ஆடினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதிக் கட்டமாக விஜய் தற்போது பேசி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பேசிய விஜய், படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான இசையமைத்திருப்பது, ஆஸ்கார் விருது கிடைத்ததற்கு சமம், என்றார்.
மேலும், ‘மெர்சல்’ படத்தில் கொஞ்சம் அரசியல் வைத்தோம், இதில் அரசியலை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் மெர்சல் காட்டியிருக்கிறார், என்றவர், ’சர்கார்’ படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை. நான் நிஜத்தில் முதல்வர், ஆனால் முதல்வராக நடிக்க மாட்டேன், என்றார்.