May 15, 2018 07:13 AM

’இருட்டு அறை’ நடிகை நிஜத்திலும் அப்படிப்பட்டவர் தானாம்!

’இருட்டு அறை’ நடிகை நிஜத்திலும் அப்படிப்பட்டவர் தானாம்!

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் பிரபலமாகியிருப்பவர் யாஷிகா ஆனந்த். ஆபாச வார்த்தைகள் மற்றும் காட்சிகளை கொண்ட அடல்ட் காமெடி படத்தில் தைரியமாக நடித்த நடிகை என்று சிலர் இவரை பாராட்டினாலும், பலர் இவரை கழுவி கழுவி ஊத்தவும் செய்கிறார்கள்.

 

ஆனால், தான் படத்தில் மட்டும் அப்படி நடிப்பவர் அல்ல, நிஜத்திலும் அது போல தான் என்று சமீபத்தில் யாஷிகா நிரூபித்துள்ளார்.

 

அதாவது, திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு, இல்லை என்று யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.

 

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் எப்போதும் மருந்து அருந்திவிட்டு, ஆண்களை படுக்கைக்கு அழைப்பது தான் இவரது கதாபாத்திரம். தற்போது இவர் கூறிய இந்த கருத்தால், இவர் படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் அப்படிப்பட்டவராக தான் இருப்பார், என்று பலர் விமர்சித்துள்ளனர்.

 

படத்தில் காட்டிய கவர்ச்சியை போல யாஷிகா, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் மிக கவர்ச்சியான உடைகளை அணிந்து வருவதோடு, தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அதில் இரட்டை அர்த்த வசனங்களையும் பதிவிடுவார், என்பது குறிப்பிடத்தக்கது.