Apr 21, 2022 05:58 PM

ஜெய் சைக்கோவாக நடிக்கும் ‘பட்டாம்பூச்சி’

ஜெய் சைக்கோவாக நடிக்கும் ‘பட்டாம்பூச்சி’

அவனி டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரிக்க, சுந்தர்.சி நாயகனாகவும், ஜெய் வில்லனாகவும் நடிக்கும் படம் ‘பட்டாம்பூச்சி’. 1980 களில் நடக்கும் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஜெய் கொடூரமான சைக்கோ கொலைகாரனாக நடிக்க, அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க துடிக்கும் காவல்துறை அதிகாரியாக சுந்தர்.சி நடிக்கிறார். இவர்களுடன்  ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

பத்ரி எழுதி இயக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய, நவநீத் சுந்தர் இசையமைக்கிறார். பென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்ய, ராஜசேகர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.  நரு.நாராயணன், மகா கீர்த்தி திரைக்கதை எழுதியுள்ளனர்.

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ,ஜெய், சுந்தர்சி இருவரின் கதாபாத்திரத்தை விளக்கும் போஸ்டர் .இவை அனைத்துமே மிகவும் வித்தியாசமாக இருப்பதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. போஸ்டரைப் பார்த்தால் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளதாக அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

 

Pattampoochi

 

இந்தப்படத்தில் ஜெயில் காட்சியில் வரும் ஒரு கானா பாடலை ஜெய் இசையமைக்க இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். “ஏக்கு  மாறு  தோ துக்கடா வாங்கடா ஜெயிள்ள தவ்லத்தா வாழ்ந்து வரும் நாங்கடா...”  எனத் தொடங்கும் இந்தப் பாட்டுக்கு ஜெயில் குத்து என்று பெயரிட்டுள்ளனர்.

 

மே மாதம் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போதிலிருந்தே துவங்கிவிட்ட நிலையில், விரைவில் டீசர் மற்றும் பாடல் வீடியோ வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .