Sep 05, 2020 07:40 AM

தமிழ் நடிகைக்கு அடி உதை! - கன்னடர்களின் வெறித்தனத்தால் பரபரப்பு

தமிழ் நடிகைக்கு அடி உதை! - கன்னடர்களின் வெறித்தனத்தால் பரபரப்பு

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சக்யுக்தா ஹெக்டே, தொடர்ந்து ‘பப்பி’, ‘வாட்ச்மேன்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர், கன்னட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

 

பெங்களூரில் வசிக்கும் இவர், அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது நடனம் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைப்பதோடு, இவரை சமூக வலைதளத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

 

இந்த நிலையில், பெங்களூரில் உள்ள பூங்கா ஒன்றில், தனது தோழிகளுடன் உடற்பயிற்சி மேற்கொண்ட சம்யுக்தா ஹெக்டேவை சிலர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆபாசமான உடை அணிந்திருப்பதோடு, போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டும் சிலர், அவரையும், அவரது தோழிகளையும் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதோ அந்த அதிர்ச்சி வீடியோ,