கலைஞர் மரணம் - கண்ணீரில் மிதக்கும் தமிழகம்
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, இன்று சற்று நேரத்திற்கு முன்பாக சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.
வயது முதிர்வு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவரும், முன்னால் முதல்வருமான மு.கருணாநிதியின் உடல் நிலை நேற்று இரவு முதல் கவலைக்கிடமாக இருந்தது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த நிலையில், கருணாநிதி இன்று சற்று நேரத்திற்கு முன்பாக 6.10 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.
பெரிய அளவில் பல விதமான தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் கருணாநிதியை காப்பாற்ற முடியவில்லை. தமிழகத்தின் மாபெரும் தலைவரை இழந்துவிட்டோம், என்று காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.