Jul 02, 2018 04:13 AM

எந்த ஹீரோவுக்காகவும் இதை மட்டும் செய்ய மாட்டேன் - கீர்த்தி சுரேஷ் அதிரடி

எந்த ஹீரோவுக்காகவும் இதை மட்டும் செய்ய மாட்டேன் - கீர்த்தி சுரேஷ் அதிரடி

‘நடிகையர் திலகம்’ படத்திற்கு பிறகு தென்னிந்தியாவின் முக்கியமான நடிகையாகியுள்ள கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, நடிகையர் திலகம் படத்தின் மூலம் தனது நடிப்பு கிடைத்த பாராட்டால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.

 

தற்போது ‘சர்கார்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எந்த நிலையிலும் தான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், குடும்பபாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன், என்று கூறியிருக்கிறார்.

 

அத்துடன், எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் முத்தக்காட்சியில் நடிக்கவே மாட்டேன், என்றும் கூறியிருக்கிறார்.