Jun 04, 2020 05:55 AM

’மாநாடு’ படத்திற்கு மீண்டும் சிக்கல்! - புதிய படத்திற்கு ரெடியான வெங்கட் பிரபு

’மாநாடு’ படத்திற்கு மீண்டும் சிக்கல்! - புதிய படத்திற்கு ரெடியான வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் ‘மாநாடு’ பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கொரோனா பாதிப்பால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்தாலும், ‘மாநாடு’ படப்பிடிப்பை உடனே தொடங்க முடியாதாம்.

 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நடிகர்களை வைத்து படமாக்க வேண்டிய காட்சிகள் இருப்பதால், தற்போதைய சூழலில் படப்பிடிப்பை உடனே தொடங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ‘மாநாடு’ குழு, அதே சமயம் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரது தேதிகளை வீணடிக்க கூடாது, என்றும் முடிவு செய்திருக்கிறதாம்.

 

இதற்காக, 30 நாட்களில் ஒரே இடத்தில் படமாக்க கூடிய கதை ஒன்றை படமாக்கி விடலாம், என்ற முடிவுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு வந்திருக்கிறாராம். இதற்காக பேய்க்கதை ஒன்றை எழுதி முடித்திருக்கும் வெங்கட் பிரபு, தற்போது அக்கதையை படமாக்க சிம்புவின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம்.

 

சிம்பு, ஓகே சொல்லிவிட்டால், ஜூலை மாதத்திலேயே பேய் படத்தின் படப்பிடிப்பை வெங்கட் பிரபு தொடங்கி விடுவாராம்.

 

அப்படி இந்த புதிய படம் தொடங்கப்பட்டால், ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தான் தொடங்கும்.