May 18, 2018 08:06 AM
தமிழ் நடிகைக்கு கொலை மிரட்டல்!

இலங்கையில் நடந்த இறுதி யுத்தம் மற்றும் அப்போது தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன படுகொலையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘18.05.2009’. இன்று வெளியாகியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் தன்யாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தனது அம்மாவுடன் வசித்து வரும் நடிகை தன்யாவின் பர்சனல் போன் நம்பரை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், அவரிடம் ஆபசமாக பேசியதோடு, ‘18.05.2009’ படத்தில் நடித்ததற்காக கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று சென்னை போலீஷ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்த தன்யா, தனக்கும் தனது அம்மாவுக்கும் உரிய பாதுகாப்பும் கேட்டுள்ளார்.