Jun 29, 2018 07:43 PM

மீண்டும் மாற்றுத்திறனாளியாக நடிக்கும் நயந்தாரா!

மீண்டும் மாற்றுத்திறனாளியாக நடிக்கும் நயந்தாரா!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயந்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடி தான்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் நயந்தாரா காது கேளாதவறாக நடித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் அதேபோன்ற காது கேளாத வேடத்தில் நயந்தாரா நடித்திருக்கிறார்.

 

நயந்தாரா கதையின் நாயகியாக நடித்து வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் தான் அவர் மீண்டும் மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கிறார்.

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.