Dec 10, 2020 06:01 AM

சாதாரணமாக பேசிய சித்ராவின் தந்தை! - பரபரப்பை ஏற்படுத்திய பேட்டி

சாதாரணமாக பேசிய சித்ராவின் தந்தை! - பரபரப்பை ஏற்படுத்திய பேட்டி

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சீரியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சக நடிகர், நடிகைகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும், சித்ராவுக்கும் தொழிலதிபர் ஹேமந்துக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அவர்கள் சமீபத்தில் பதிவு திருமணம் செய்துக் கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

மேலும், சித்ராவின் கணவர் ஹேமந்த் தவறான மனிதர் என்றும், அவருக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், சித்ராவின் தொழிகளான சில நடிகைகள் கூறி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், சித்ராவின் மரணம் குறித்து காவல் துறையில் புகார் அளித்திருக்கும் அவரது தந்தை, தனது மகளின் தற்கொலையில் எந்தவித சந்தேகமும் இல்லை, என்று கூறியிருப்பதோடு, மகள் இறந்த துக்கத்தை துளியும் வெளிக்காட்டாமல், ரொம்ப சாதாரணமாக ஊடகங்களுக்கு பேட்டியளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.