Jul 18, 2020 08:17 AM

‘சித்தி 2’ சீரியலுக்கு வந்த பிரச்சினை! - ராதிகாவின் அதிரடி நடவடிக்கை

‘சித்தி 2’ சீரியலுக்கு வந்த பிரச்சினை! - ராதிகாவின் அதிரடி நடவடிக்கை

கொரோனா பாதிப்பால் சினிமா மற்றும் டிவி சீரியல் துறைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எப்போது சினிமா திரையரங்கங்கள் திறக்கப்படும் என்றும், சினிமா படப்பிடிப்புகள் துவங்கும் என்றும் தெரியவில்லை. இதனால், அத்துறையில் ஈடுபட்ட தொழிலாளிகள் மட்டும் இன்றி முதலாளிகளும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

 

இதற்கிடையே, சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க அரசு அனுமதி அளித்தாலும், சீரியலில் நடிக்கும் பழைய நடிகர், நடிகைகள் மீண்டும் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சில தொலைக்காட்சிகள் தங்களது பழைய சீரியல்களை நிறுத்தியுள்ளது. குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நான்கு சீரியல்கள் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், கொரோனா பிரச்சினைக்கு முன்பு துவங்கிய ராதிகாவின் ‘சித்தி 2’ சீரியலும் பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. அந்த சீரியலில் நடிக்கும் சில நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு வர மறுத்து வருகிறார்கள். காரணம், கொரோனா வைரஸ் பரவல் சென்னையில் தீவிரமடைந்திருப்பதால் தற்போது படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என்று கூறி வருகிறார்கள். மறுபக்கம் தொலைக்காட்சியும் சீரியலின் புதிய எப்பிசோட்களை உடனே ஒளிபரப்ப வேண்டும், இல்லை என்றால் அந்த சீரியலை நிறுத்தி விட்டு புதிய சீரியலை ஒளிபரப்பு செய்ய வேண்டும், என்று அழுத்தம் கொடுத்து வருகிறது.

 

மேலும், தற்போது மக்களிடம் சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைத்துவிட்டதால், பல தொலைக்காட்சிகள் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்கிறது. இதனால் சேனலுக்கு நல்ல டி.ஆர்.பி கிடைப்பதால் தொடர்ந்து திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்வதில் சேனல்கள் ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் பல சீரியல் தயாரிப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளார்கள்.

 

அந்த வகையில், ராதிகா தற்போது நம்பியிருக்கும் தனது ‘சித்தி 2’ சீரியலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தனது விடா முயற்சியினால், எப்படியும் ‘சித்தி 2’ சீரியலை வெற்றி சீரியலாக மாற்றிக் காட்டும் வகையில், பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

 

Nizhalgal Ravi and Meera Krishnan

 

அதன்படி, ‘சித்தி 2’-வில் ராதிகாவுக்கு கணவராக நடித்து வந்த பொன்வன்னனுக்கு பதில் இனி நிகழ்கள் ரவி அந்த வேடத்தில் நடிக்க இருக்கிறார். அதேபோல், புதிய வில்லி கதாப்பாத்திரத்தில் ‘நாயகி’ புகழ் மீரா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

இப்படி பல்வேறு மாற்றங்கள் மூலம் ‘சித்தி 2’ சீரியலின் புதிய எப்பிசோட்களை படமாக்க தொடங்கியிருக்கும் ராதிகா, விரைவில் தனது சீரியல் பழையபடி மக்கள் மனதில் இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் விறுவிறுப்பாக பணியாற்ற தொடங்கியுள்ளார்.