May 11, 2020 03:48 PM

கார் டிரைவருடன் சிக்கிய பிரபல நடிகை! - போலீஸ் வழக்கு பதிவு

கார் டிரைவருடன் சிக்கிய பிரபல நடிகை! - போலீஸ் வழக்கு பதிவு

திரைப்பட நடிகர், நடிகைகள் சிலர் குற்ற செயல்களில் ஈடுபடுவதும், அதனால் சர்ச்சையில் சிக்குவதும் அவ்வபோது நிகழ்ந்து வருகிறது.

 

அந்த வகையில், பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான பூனம் பாண்டே, தனத் டிரைவருடன் சட்டத்தை மீறியதற்காக போலீஸாரிடம் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

 

2013 ஆம் ஆண்டு வெளியான ‘நாசா’ என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பூனம் பாண்டே, தொடர்ந்து இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். 

 

Actress Poonam Pandey

 

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நடிகை பூனம் பாண்டே, ஊரடங்கு உத்தரவை மீறி தனது காரில் ஊர் சுற்றி வந்திருக்கிறார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் போலீஸாரிடம் பிடிபட்ட நடிகர் பூனம் பாண்டே மற்றும் அவரது கார் டிரைவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.