Jul 26, 2020 03:41 PM

கிரிமினல் வழக்கு தொடருவேன் - ஞானவேல்ராஜா எச்சரிக்கை

கிரிமினல் வழக்கு தொடருவேன் - ஞானவேல்ராஜா எச்சரிக்கை

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருப்பவர் கே.இ.ஞானவேல்ராஜா. இவரது ஸ்டுடியோ கிரீன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்ததோடு, தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுப் படங்களையும் தயாரித்துள்ளது.

 

இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக சில ஊடகங்கள் தன்னை பற்றி தவறான செய்தியை வெளியிட்டு இருப்பதாகவும், இதனால் தானும், தனது குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய செயல் தொடர்ந்தால், சம்மந்தப் பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்வதோடு, மான நஷ்ட ஈடு வழக்கும் தொடரப்படும், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை இதோ,

 

Studio Green