Nov 23, 2018 03:48 AM

புயலால் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டி தரும் ராகவா லாரன்ஸ்!

புயலால் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டி தரும் ராகவா லாரன்ஸ்!

தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்  கஜா புயலால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அரசாங்கம் மற்றும் பல தொண்டு நிறுவனங்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்போவதாக அறிவித்துள்ளார்.

 

இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில், “கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்.

 

எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீடு மட்டுமில்லை, இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப்பட்ட 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன். அப்படி பாதிக்கப் பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.

 

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள், நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன். ஒரு தனியார் தொலைகாட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

 

அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள், உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்.” என்றார்.