Jan 23, 2022 04:46 PM

கார்த்தி படத்தை இயக்கும் ‘பேச்சுலர்’ பட இயக்குநர்

கார்த்தி படத்தை இயக்கும் ‘பேச்சுலர்’ பட இயக்குநர்

‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘விருமன்’ ஆகிய படங்களை முடித்துவிட்ட கார்த்தி, தற்போது ‘சர்தார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், கார்த்தியின் அடுத்தப் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

 

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் தான் கார்த்தி அடுத்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சதீஷ் செல்வகுமார் கார்த்தியிடம் ஒரு கதை சொல்ல, அது அவருக்கு பிடித்துவிட்டதாம். முழு திரைக்கதையையும் எழுதுமாறு சதீஷிடம் கார்த்தி கூறியிருக்கிறாராம்.

 

இதையடுத்து, சதீஷ் செல்வகுமாருக்கு ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்துவிட்டதாம். தற்போது முழு திரைக்கதை உருவாக்க பணியில் ஈடுபட்டுள்ள சதீஷ் செல்வகுமார், தான் கார்த்தியின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் இயக்குநர் என்பது உறுதியாகியுள்ளது.

 

இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க இருக்கிறார்களாம்.