சிம்புக்கும், திரிஷாவுக்கும் திருமணம்? - கோலிவுட்டில் புது பரபரப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதோடு பட வாய்ப்புகளை இழந்தார். இதையடுத்து அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தவர் இழந்த படங்களை திரும்ப பெற்றார். அந்த வகையில், ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிம்பு திருமணம் குறித்து பல்வேறு தகவல் வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்று, சிம்புவும், திரிஷாவும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய அளவில் பிரபல சினிமா நாளிதழாக விளங்கும் பிலிம்பேர் இந்த செய்தியை வெளியிட்டிருப்பதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் காதல் வயப்பட்ட திரிஷாவுக்கு அவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணம் நின்றது.
தான் கடைசிவரை நடித்துக் கொண்டு தான் இருப்பேன், என்று கூறி வரும் திரிஷா, திருமணம் குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறி வருகிறார்.