Dec 16, 2020 04:27 AM
திரிஷாவின் ‘ராங்கி’ பட பாடலை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராங்கி’. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் இப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் எம்.சரவணன் இயக்கியுள்ளார்.
சி.சத்யா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “பனித்துளி விழுவதால் அனையாது தீபம்....” என்ற பாடல் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
கபிலன் வரிகளில், சின்மயி குரலில் உருவாகியுள்ள இப்படாலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று மாலை வெளியிட்டார்.
பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்த பாடல் இதோ,