Jul 21, 2020 07:39 AM

பணத்திற்காக இப்படி செய்வதா? - சூர்யா தேவி மீது நடவடிக்கை!

பணத்திற்காக இப்படி செய்வதா? - சூர்யா தேவி மீது நடவடிக்கை!

வனிதாவின் 3 வது திருமணத்திற்கு எதிராகவும், பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கிறேன், என்று கூறிக்கொண்டு யுடியுபில் வீடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சூர்யா தேவி. இவர் வனிதாவை மிக கடுமையாக விமர்சித்து வெளியிடும் வீடியோக்களில் மிக ஆபாசமாக பேசுவதோடு, தனது உடல் செய்கைகளையும் ஆபாசமாக செய்கிறார். இதற்கு பல நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து வருவதால், சூர்யா தேவி வீடியோ வெளியிடுவதை தற்போது வரை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.

 

இதற்கிடையே, சூர்யா தேவி குறித்து வனிதா காவல் துறையில் புகார் அளித்ததோடு, அவர் பற்றிய பகீர் பின்னணி குறித்த ஆதாரங்களையும் வெளியிட்டார். அப்போதும் சூர்யா தேவி, வனிதாவை மிரட்டி வீடியோ வெளியிட்டார். சூர்யா தேவிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனர் தலைவரான ராஜேஸ்வரி பிரியா, சூர்யா தேவிக்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு, பணத்திற்காக இப்படி ஒரு இழிவான செயலில் ஈடுபடும் சூர்யா தேவி, இதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கை, சட்ட ரீதியில் எடுக்கப்படும், என்று எச்சரித்துள்ளார்.

 

இது குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராஜேஸ்வரி பிரியா, சூர்யா தேவி பற்றி பல திடுக்கிடும் தகவல்களை கூறியதோடு, அவரை கடுமையாக எச்சரித்தார்.

 

இதோ அந்த வீடியோ,