May 24, 2020 01:10 PM

வாணிஸ்ரீயின் மகன் தற்கொலைக்கு காரணம் இதுவா?

வாணிஸ்ரீயின் மகன் தற்கொலைக்கு காரணம் இதுவா?

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் ஒரே மகன் அபிநய வெங்கடேஷ் கார்த்திக், நேற்று முன் தினம் மரணம் அடைந்தார். 36 வயதாகும் அபிநய வெங்கடேஷ் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவர் நெஞ்சுவலி காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக முதலில் கூறப்பட்டது.

 

பிறகு, அவர் சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டில் உள்ள தனது பண்ணை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வெளியானது. மேலும், ஊரடங்கு காரணமாக மன தனது பண்ணை வீட்டில் இருந்த அபிநய வெங்கடேஷ் மன அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்துக் கொண்டார் என்று கூறப்பட்டது.

 

இந்த நிலையில், அபிநய வெங்கடேஷ் சொத்து பிரச்சினையில் தான் தற்கொலை செய்துக் கொண்டார், என்ற தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், அபிநய வெங்கடேஷின் தற்கொலைக்கான காரணம் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமான காரணம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.