Oct 21, 2020 01:19 PM

ஜீ தமிழ் சீரியல் நடிகை திடீர் மரணம்! - அதிர்ச்சியில் சீரியல் உலகம்

ஜீ தமிழ் சீரியல் நடிகை திடீர் மரணம்! - அதிர்ச்சியில் சீரியல் உலகம்

சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலமடைந்த தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். வட இந்தியாவில் முன்னணியில் இருந்த ஜீ தொலைக்காட்சி, தமிழியில் சீரியல்கள் மூலம் முதன்மை சேனலாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ‘செம்பருத்தி’, ‘யாரடி நீ மோஹினி’ போன்ற சீரியல்கள் மூலம் ஜீ தமிழ் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடமும் பிடித்துள்ளது.

 

அதேபோல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர் ‘இனிய இரு மலர்கள்’. இந்தி தொடரான இது தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், அசல் தமிழ் சீரியல் போலவே இருந்ததால் மக்களிடம் பிரபலமானது. 

 

இந்த நிலையில், ‘இனிய இரு மலர்கள்’ தொடரின் நாயகனின் பாட்டியாக நடித்த நடிகை ஜரீனா ரோஷன், மாரடைப்பால் மரணம் அடைந்த தகவல் சீரியல் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

54 வயதாகும் நடிகை ஜரீனா கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவால் சிகிக்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.

 

 

View this post on Instagram

💔...

A post shared by Sriti Jha (@itisriti) on Oct 18, 2020 at 9:21am PDT