Aug 10, 2017 11:34 AM

விஷால் - கார்த்தி இணைந்த படம் டிராப்! - எழும்புமா நடிகர் சங்க கட்டிடம்?

விஷால் - கார்த்தி இணைந்த படம் டிராப்! - எழும்புமா நடிகர் சங்க கட்டிடம்?

நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டி முடித்த பிறகே கல்யாணம் செய்துக் கொள்வேன் என்ற வைராக்கியத்தில் இருக்கும் விஷால், பல்வேறு வகையில் நிதி திரட்டுவதுடன், கார்த்தியுடன் இணைந்து படம் ஒன்றிலும் நடிக்கும் பணியை மேற்கொண்டார். பிரபு தேவா இயக்கும் இப்படத்திற்கு ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்று தலைப்பு வைத்து, அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சியோடு அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

 

இதற்கிடையே படம் தொடங்கிய மூன்றே நாட்களில், சொல்லாமல் கொள்ளாமல், மும்பை பறந்த பிரபு தேவா, அங்கிருந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு, “படம் டிராப்” என்று மெசஜ் அனுப்பியுள்ளார்.

 

அதிர்ச்சியடைந்த ஐசரி அவரிடமே விவரத்தை கேட்டுவிட்டு இன்னும் அதிகமாகவே அதிர்ச்சியடைந்தாராம். காரணம், கார்த்திக்கு தெரியாமல் விஷாலும், விஷாலுக்கு தெரியாமல் கார்த்தியும், பிரபுதேவாவை தொடர்பு கொண்டு, என் கதாபாத்திரத்தை எப்படி டிசன் பண்ணீயிருக்கீங்க, ஒன்னு விடாமல் சொல்லுங்க, என்று நச்சரித்துவிட்டார்களாம்.

 

இயக்குநர் நினைத்தபடி உருவாகும் படங்கள் தான் ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமையும், இப்படி தங்களுக்காக காட்சிகள் இருக்க வேண்டும் என்று விரும்பும் நடிகர்களுக்காக எடுக்கப்படும் படங்கள், அட்டர் பிளாப்பாகிவிடும், என்பதில் மாஸ்டர் உரிதியாக இருப்பதால், எடுத்து பிளாப் ஆவதை விட, எடுக்காமல் விட்டுவிடுவதே நல்லது, என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருக்கிறார்.