Sep 03, 2019 05:22 AM

கலவரப்பகுதியாகும் பிக் பாஸ் வீடு! - காரணம் இவர்கள் தான்

கலவரப்பகுதியாகும் பிக் பாஸ் வீடு! - காரணம் இவர்கள் தான்

பிக் பாஸ் வீட்டை பரபரப்பாக வைத்திருப்பதில் நம் ஒன்னாக திகழும் வனிதா, கவினுடன் மல்லுக்கட்டிய விவகாரம் மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது. சமாளிக்க முடியாத கவின், கதவை திறந்து வையுங்கள், இப்போதே வெளியே போகிறேன், என்று கூறியதோடு கண்ணீர் விட்டு அழுதார்.

 

இந்த நிலையில், மீண்டும் நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டும் வகையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பழைய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் விரைவில் வருகிறார்கள்.

 

அபிராமி, சாக்‌ஷி மற்றும் மோகன் வைத்யா ஆய மூவர் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், அபிராமி மற்றும் சாக்‌ஷி வருவது உறுதியாகியுள்ளது. ஒரு வாரம் பிக் பாஸ் வீட்டில் விருந்தினர்களாக இவர்கள் தங்க இருக்கிறார்கள்.

 

Abirami and Sakshi

 

இதனால், முகேன், அபிராமியின் காதல் விவகாரமும், சாக்‌ஷி, கவினின் மோதல் விவகாரமும் சூடு பிடிக்கும் என்பதால், இனி பிக் பாஸ் வீடே ஒரு கலவர ஏரியாவாக காட்சியளிக்கப் போவது உறுதி.