Nov 19, 2020 04:15 PM

விஜய் மில்டன் இயக்கும் கன்னட படம் பூஜையுடன் தொடங்கியது

விஜய் மில்டன் இயக்கும் கன்னட படம் பூஜையுடன் தொடங்கியது

’கோலி சோடா’ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு கன்னட திரையுலகில் நுழைகிறார். கன்னடத்தில் வெற்றி இணையான சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயாவை இயக்குகிறார்.

 

இப்படத்தில் சிவராஜ் குமார்  ஜோடியாக  அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தைத் தமிழில் 'கோலிசோடா', 'கடுகு' போன்ற படங்களைத்  தயாரித்த ரஃப்நோட் நிறுவனம், கன்னடத்தில் கிருஷ்ண சர்த்தக்-ன் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. 

 

கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய்மில்டன். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார். பிரகாஷா புட்டசாமி கலை இயக்குநராக பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சி செய்கிறார். ஜான்சன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார். 

 

இப்படத்தின் துவக்க விழா இன்று பெங்களூரில் பூஜையுடன் நடைபெற்றது. படப்பிடிப்பு வரும் 23 ஆம் தேதி பெங்களூரில் உள்ள சான்ஸ்க்ரிட் கல்லூரியில் தொடங்கி, 40 நாட்கள் தொடர்ந்து பெங்களூரில் நடைபெற உள்ளது.