Apr 06, 2021 04:33 PM

முதல் நபராக வாக்களித்த நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

முதல் நபராக வாக்களித்த நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வரும் நிலையில், சிலர் காலை 6 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்து காத்திருந்தனர். அதன்படி, நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், முதல் நபராக வாக்களித்துள்ளார்.

 

திரையுலகினர் பலர் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டதோடு, வெளியூரில் இருந்தவர்கள் வாக்களிப்பதற்காக அவர் அவர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அந்த வகையில், நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், சினிமா பணிகளுக்காக சென்னையில் தங்கியிருந்தவர், வாக்களிப்பதற்காக தஞ்சைக்கு புறப்பட்டார்.

 

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜா சரபோஜி அரசினர் கலை கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் முதல் நபராக நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாக்களித்தார்.

 

திரைப்பட தயாரிப்பு மற்றும் நடிப்பு என சினிமாவில் மட்டும் இன்றி தொழில்துறை மற்றும் சமூக பணிகளில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், வாக்களிக்கும் கடமையை தவறாமல் செய்ய வேண்டும், என்பதற்காக தனது சொந்த ஊருக்கு வந்து முதல் நபராக வாக்களித்த நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரை, தஞ்சை மக்கள் மட்டும் இன்றி திரயுலகினரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

 

‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தொடர்ந்து ‘டேனி’, ‘க.ப.ரணசிங்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது சரவண சுப்பையா இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாக உள்ள ‘மீண்டும்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பதோடு, எழில், சற்குணம் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருவதோடு, திரைப்பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.