May 22, 2021 12:03 PM

துளசி அய்யா வாண்டையார் இறப்புக்கு நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் இரங்கல்

துளசி அய்யா வாண்டையார் இறப்புக்கு நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் இரங்கல்

சுதந்திர போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 95. அவருடைய இறப்புக்கு அரசியல் தலைவர்கள்  இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், துளசி அய்யா வாண்டையார் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”ஐயா, துளசி அய்யா வாண்டையாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். 

 

சுதந்திர போராட்டத்திற்காக போராடியவர், டெல்டா மாவட்ட மக்களின் கல்விக்காகவும் தொடருந்து உழைத்துக் கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், எம்.பி-யாகவும் சிறப்பாக செயலாற்றியவர், தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி புஷ்பம் கல்லூரியின் தாளாளராக இருந்து, டெல்டா மாவட்டங்களில் உள்ள குடும்பங்களின் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கினார்.

 

பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களோடு நெருங்கிப் பழகியவராக இருந்தாலும், தனது எளிமையான வாழ்க்கை முறை மூலமாகவும், நேர்மையான அரசியல்வாதியாகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். ஐயா நம்மை விட்டு பிரிந்தாலும், அவருடைய சாதனைகள் மூலம் என்றுமே நம் மனதில் நிலைத்திருப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.