May 05, 2019 09:16 AM

நடிகர் சரத்குமாரை கைது செய்ய உத்தரவு!

நடிகர் சரத்குமாரை கைது செய்ய உத்தரவு!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிலத்தை விற்பனை விவகாரத்தில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் ராதாரவியை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலத்தில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை பொதுக் குழுவின் அனுமதியின்றி முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, செல்வராஜ் மற்றும் முன்னாள் மேலாளர் நடேசன் ஆகியோரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

மேலும், இந்த விசாரணையை மூன்று மாதத்திற்கு முடிக்கமாறும் போலீசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.