May 07, 2019 03:16 PM

மகளால் மனவருத்தப்படும் காமெடி நடிகர் சாமிநாதன்! - காரணம் இது தான்

மகளால் மனவருத்தப்படும் காமெடி நடிகர் சாமிநாதன்! - காரணம் இது தான்

38 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகராக பயணித்துக் கொண்டிருப்பவர் சாமிநாதன். 1985 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ‘நான் சிகப்பு மனிதன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான சாமிநாதன், சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்தவர். நாசர் இவருக்கு ஜூனியராம்.

 

திரைபப்டக் கல்லுரியில் படிப்பை முடித்துவிட்டு பல நிறுவனங்களில் வாய்ப்பு தேடி அலைந்த சாமிநாதனுக்கு ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு பிறகு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், காமெடியனாக நடிக்க வேண்டும் தனது ஆசையால் ஹீரோ வாய்ப்பை நிராகரித்தவர், தற்போது வரை தனது காமெடி பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.

 

சந்தானத்துடன் இவர் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றவையாகும். தற்போது வரை 650 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சாமிநாதன், ஒரு நடிகராக மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு தந்தையாக தனது மகளால் மனவருத்தம் அடைந்திருக்கிறார்.

 

60 வயதாகும் சாமிநாதனுக்கு இன்னும் பைக் ஓட்டத் தெரியாதாம். இதனால் அவர் என்றைக்கும் கவலைப்பட்டதில்லையாம். ஆனால், ‘விஸ்வாசம்’ படம் பார்த்ததும், தனது மகளை அப்படி உட்கார வச்சு பைக் ஓட்ட முடியலையேனு, சாமிநாதம் ரொம்பவே வருத்தப்பட்டாராம்.

 

இதை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.