இரவில் நடந்த வாழ்க்கையோட அசிங்கமான பகுதி! - கண்கலங்கிய சுதா சந்திரன்
1984 ஆம் ஆண்டு வெளியான ‘மயூரி’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நடிகையான சுதா சந்திரன், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழித்திரைப்படங்களில் நடித்தார்.
80 களில் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகையாக வலம் வந்த சுதா சந்திரன், தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருவதோடு, தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் ரியாலட்டி ஷோக்களில் பிஸியாக இருக்கிறார்.
இந்த நிலையில், சுதா சந்திரன் தனது சிறுவயதில் திருச்சியில் நடந்த கோர விபத்து குறித்து கண் கலங்கியபடி சமீபத்தில் பேசியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து பேசிய சுதா சந்திரன், “அந்த விபத்தில் குறைந்தபட்ச காயமடைந்தது நான் தான். என்னை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வண்டி ஓட்டியவர் என் மடியில் சிதைந்து கிடந்தார். ஒரு பெண்மணி அதைவிட கொடூரமாக, என வாழ்க்கையோட அசிங்கமான பகுதி என்று சொல்வார்களே அதை அன்றிரவு தான் பார்த்தேன், மே-2. மிகவும் பொத்தி பொத்தி எனது பெற்றோர்கள் பாதுகாத்து வந்ததை அன்றிரவு, இது தான் உண்மையான வாழ்க்கை என காட்டிவிட்டது.” என்று அழுதபடியே கூறினார்.